சாலையில் ஏற்பட்ட பள்ளம்

Update: 2022-08-25 17:46 GMT

திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயின் குறுக்காக கட்டப்பட்ட தரைப்பாலத்தில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதேபோல் நாகல்நகர் மேம்பாலத்தில் உள்ள சாலையிலும் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.




மேலும் செய்திகள்