கரூர் மாவட்டம், ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் குட்ட கடையிலிருந்து ஆலம்பாளையம் செல்லும் தார்சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த தார்சாலை சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்களும், லாரிகள், கார்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.