திருச்சி நகர பகுதிகளான உறையூர், தில்லை நகர், புத்தூர் மிக முக்கிய பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளில் சில மாதங்களாக நடைபெறும் பல பணிகளின் காரணமாக இந்தப்பகுதிகளிலுள்ள எல்லா சாலைகளும் சிதிலமடைந்து உள்ளதால் இரு, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். முதியவர்கள் தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.