குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-08-25 13:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசலில் இருந்து ஆர்.புதுப்பட்டினம் செல்லும் சாலை கடற்கரையில் இருந்து அதிக மீன்கள் ஏற்றி செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வானத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்