சாலை சீரமைக்கப்படுமா.?

Update: 2022-08-24 14:43 GMT


நாகை நகர் பகுதியில் உள்ளகடைத்தெருவில்‌, நீண்ட நாட்களாக சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது, இதனால் கடை தெருவுக்கு ‌வரும் பொது மக்கள் ‌சிரமத்திற்கு உள்ளாகின்றன, இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்துசாலையை சீரமைக்க முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்