நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர், கருவேலங்கடையை இணைக்கும் சாலையின் அருகே ஆறு ஓடுகிறது. ஆற்றை கடக்க அமைக்கப்பட்ட பாலம் மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் பாலத்தில் தேங்கி விடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை.