குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-08 17:55 GMT

கரூர் மாவட்டம், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் இருந்து நல்லிக்கோவில் செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் தற்போது தார் சாலை சிதிலமடைந்து குண்டும் ,குழியுமாக உள்ளது. இந்த தார் சாலை வழியாக பள்ளி, கல்லூரி பஸ்களும், கார் ,லாரி, டிராக்டர், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்