பராமரிப்பில்லாத சிறுவர் பூங்கா

Update: 2026-03-08 14:44 GMT

திருச்செங்கோடு கொல்லப்பட்டி வீட்டுவசதி வாரிய காலனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு சிறுவர் பூங்கா கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆனால் பூங்காவில் பராமரிப்பாளர், இரவு காவலர், தூய்மைப்பணியாளர் என யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் பூங்காவில் வைக்கப்பட்ட பூச்செடிகள் பராமரிக்கப்படாமல் காய்ந்து வருகிறது. பூங்கா முழுவதும் புதர்களாக புற்கள், செடிகள் வளர்ந்து இருக்கின்றன. இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் வருவதில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்