விருதுநகர் மாவட்டம் ஒ.முத்துலாபுரம் ஊராட்சியில் சில வருடங்களுக்கு முன்னர் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் கிடக்கிறது. இதனால் பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவில் சேதமடைந்த உபகரணங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?