பூட்டியே கிடக்கும் பூங்காக்கள்

Update: 2025-06-29 16:50 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி பகுதியில் குழந்தைகள், முதியோர்கள் நலனுக்காக ராஜாநகர், அண்ணாநகர், தெரசம்மாள் காலனி பல்வேறு பகுதிகளில் பூங்காக்கள் உள்ளன. இங்கு விடுமுறை நாட்களில் அனைவரும் சென்று விளையாடி மகிழ்வார்கள். ஆனால் தற்போது நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் பூட்டியே கிடக்கிறது. இதனால் குழந்தைகள் சாலைகளில் விளையாடி வருகின்றனர். இதனால் பல நேரங்களில் விபத்துகள் அரங்கேறுகிறது. எனவே பழனி நகரில் பூட்டியுள்ள பூங்காக்களை திறக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்