விஷ ஜந்துகள் நடமாட்டம்

Update: 2025-06-01 10:16 GMT

கோவை குறிச்சி குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து செல்லும் பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது. ஆனால் குறிச்சி குளக்கரையில் குனியமுத்தூரை ஒட்டியுள்ள பகுதிகளில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அந்த குளக்கரையை முறையாகவும், முழுமையாகவும் பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்