பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2024-06-23 11:06 GMT

சென்னை ஆதம்பாக்கம், ஆபிசர் காலனி முதல் தெருவில் மாநகராட்சி சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இந்த பூங்கா சரியாக பராமரிக்கப்படாததால் செடி, கொடி படர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. மேலும் மின்விளக்குள் எரியாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் பூங்காவிற்கு வருவதில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் தொலைவில் உள்ள மற்றொரு பூங்காவிற்கு செல்லும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பூங்காவை சீரமைத்து, மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்