பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-05-05 14:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தங்கையா தெரு பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவை சமீபத்தில் புதுப்பித்தனர். அந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் இடத்தில் மணல் நிரப்புவதற்கு பதிலாக எம்சாண்ட் கொட்டி உள்ளனர். இதனால் சிறுவர்கள் கீழே விழும் போது காயம் ஏற்படுகிறது. மேலும், உடல் முழுவதும் எம்சாண்ட் மணல் ஒட்டுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் எம்சாண்டுக்கு பதில் வேறு புதிய மணலை நிரப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்