திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை சீர் செய்ய கோரிக்கை

Update: 2023-12-24 15:01 GMT
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானம் தந்தை பெரியார் கல்லூரி அருகே உள்ள திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் உள்ளது. இதனை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தினமும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த உடற்பயிற்சி கூடம் கடந்த 6 மாத காலமாக உடற்பயிற்சி உபகரணங்கள் பழுதடைந்துள்ளது இதை மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து சீர் செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்