பயண்படுத்த முடியாத பூங்கா

Update: 2023-12-10 13:26 GMT

சென்னை கிண்டி, ஆதம்பாக்கம் தலைமை செயலக காலனியில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து பல முறை 174-வது வார்டு கவுன்சிலரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2 ஆண்டுகளாக கவுன்சிலர் உள்பட எந்த அதிகாரிகளும் இந்த பூங்காவை பார்வையிட்டு செல்லவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்