பொதுமக்கள் அச்சம்

Update: 2023-10-08 12:44 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள நகராட்சி பூங்காவிற்கு தினமும் எண்ணற்ற பேர் வந்து செல்கின்றனர். பூங்காவில் உள்ள நடைபாதை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் தேவையற்ற செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே நடைபாதையை சீரமைக்கவும், தேவையற்ற செடிகளையும் அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்