பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2022-08-16 14:08 GMT

திருச்சி மாநகராட்சி கே.கே.நகர் லிங்கன் தெருவில் உள்ள திருவள்ளுவர் பூங்கா கடந்த 4-5 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது ஏராளமான மூத்த குடிமக்களும், பெண்களும் இங்கு காலை, மாலை நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இங்குள்ள உடற்பயிற்சி சாதனங்களும் நன்றாக உபயோகத்தில் இருந்தன. இந்த மையத்தில் புல்வெளி ஒன்றும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த பூங்கா கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. நடைபாதையில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. ஒளி விளக்குகள் மாலை நேரத்தில் ஒரு பகுதியில் மட்டும் ஒளியூட்டுகின்றன. புல்வெளி களைச்செடிகள் மண்டியுள்ளதால், பாம்பு போன்ற உயிரினங்கள் வசிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையிலும் பலர் இந்த பூங்காவைத்தொடர்ந்து உபயோகப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது கடந்த 2 நாட்களாக பூட்டப்பட்டநிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடடிவக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்