நடைமேடையை சரிசெய்ய கோரிக்கை

Update: 2022-08-15 12:46 GMT
புதுக்கோட்டை கறம்பக்குடி பஸ்நிலைய சாலையில் பேரூராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா உள்ளது. இதில் காலை நேரங்களில் பலர் நடை பயிற்சி செய்து வருகின்றனர். ஆனால் இந்த பூங்காவில் உள்ள நடைமேடை உடைந்து மேடு பள்ளமாக உள்ளது. இதனால் முறையாக நடைபயிற்சி செல்ல முடிவதில்லை. மேலும் சிறுவர் சிறுமிகள் விளையாடும் உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. போதுமானதாகவும் இல்லை. எனவே கறம்பக்குடியில் உள்ள ஒரே பொழுதுபோக்கு இடமான காந்தி பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்