பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2022-08-10 13:23 GMT

பொள்ளாச்சி டி.ேகாட்டாம்பட்டி ரத்தினசபாபதி புரத்தில் நகராட்சி பூங்கா உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். ஆனால் பூங்கா புதர் மண்டி போதிய பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. இதனால் விஷ ஜந்துகளின் புகலிடமாக உள்ளது. இதன் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்