புதர்மண்டிகிடக்கும் நடைபாதை

Update: 2022-08-06 16:07 GMT
தஞ்சை கல்லணை புதுஆற்றங்கரையில் மாமன்னன் ராஜராஜசோழன் நடைபாதை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் நடைபாதை ஒரு பகுதி முழுவதும் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியை மதுப்பிரியர்கள் மதுகுடிக்கும் இடமாக மாற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதர்மண்டி கிடக்கும் நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்