பூங்கா திறக்கப்படுமா?

Update: 2022-07-25 17:55 GMT

கடலூர் வில்வநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் பல லட்சம் ரூபாய் செலவில் பூங்கா கட்டப்பட்டது. அதில் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்களும் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த பூங்கா இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. பூங்காவில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. விளையாட்டு உபகரணங்களும் வீணாகி வருகிறது. ஆகவே இதை முறைப்படி திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்