தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2023-08-23 08:56 GMT

குளச்சல் பகுதியில் நகராட்சி பூங்கா உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பூங்காவை கண்டு ரசித்தும், சிறுவர்கள் இங்கு உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடியும் மகிழ்கின்றனர். பூங்கா முன்பு பல வருடங்களாக நீரோடை ஒன்று காணப்படுகின்றது. அந்த நீரோடையில் உள்ள நீரானது பல வருடங்களாக மாசடைந்து சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்