சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-24 19:06 GMT

கடலூர் பாரதி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு ஒரு நபருக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன. இருக்கிற விளையாட்டு உபகரணங்களும் சிறுவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துகின்றன. பூங்காவில் உள்ள மணிக்கூண்டும் பராமாப்பின்றி மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்