பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-24 16:50 GMT

தஞ்சை கீழவாசல் பகுதி எஸ்.என்.எம். நகரில் உள்ள பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பூங்காவில் உள்ள மின்விளக்குகள், நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பூங்காவில் உள்ள இருக்கைகள் உடைந்து உள்ளன. மேலும் கழிவறையும் அசுத்தமாக காட்சி அளிக்கிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள பூங்காவை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்