பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2023-08-02 14:15 GMT

சென்னை பட்டாளம் பகுதியில் உள்ள வாடியா பூங்கா பராமரிக்கபடாமல் புதர்கள் மண்டி காணப்படுகிறது. குப்பைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. பூங்காவை பராமரிக்க ஆட்கள் இல்லாததால் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து கிடக்கிறது. இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே இந்த பூங்காவை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்