பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2023-07-30 17:35 GMT

தர்மபுரி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் இருவழி சாலை தர்மபுரி- சேலம் சாலையுடன் இணைகிறது. இந்த ரெயில் நிலைய சாலையின் மைய பகுதியில் பல்வேறு மரங்கள் கொண்ட பூங்கா அமைந்துள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் முறையாக பராமரிக்கப்படாததால் இந்த பகுதி சுகாதார கேடு அடைந்து காணப்படுகிறது. இங்கு வளர்ந்து உள்ள மரங்களும் பராமரிப்பு இல்லாமல் உள்ளன. இதை கருத்தில் கொண்டு மர பூங்காவை சீரமைத்து முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்