பாராக மாறிய பூங்கா

Update: 2023-07-12 13:27 GMT

சென்னை பெரம்பூர், செம்பியத்தில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிக்கபடாமல் புதர்கள் மண்டி காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் குடிகாரர்களின் இருப்பிடமாக மாறிவிடுகிறது. பூங்காவை பராமரிக்க ஆட்கள் இல்லாததால் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்