போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-07-12 10:19 GMT
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளாக சிகிச்சை பெற வந்து செல்கிறார்கள். உள்நோயாளிகளாக ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு வருபவர்கள் இருசக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் உள்ள சாலைகளில் இருபுறங்களிலும் நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் இந்த பகுதியில் சென்று வரும் பொதுமக்கள் மற்றும் மருந்துகள் மருத்துவ உபகரணங்களை கொண்டு வரும் வாகனங்கள் எளிதாக சென்று வர முடியாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே மருத்துவமனைக்கு வரும் இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்ய சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்