பூங்கா சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-23 15:19 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருத்துவமனை ரோட்டில் சிறுவர் பூங்கா இயங்கி வருகிறது. இந்த பூங்காவில் நடைபயிற்சிக்காக  காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில் இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கழிப்பறைகள் புதர் மண்டி காணப்படுகிறது.எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்