பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2023-05-21 11:53 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி செல்லும் வழியில் உள்ள தமிழ் நகரில் பல லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா அமைக்கப்பட்ட உடனே திறக்கப்படாமல் பல ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களால் திறக்கப்பட்டது. தற்போது இந்த பூங்காவில் அதிக அளவில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதனால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பூங்காவை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்