சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-07-22 11:31 GMT
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலை வெட்டுகுல கரையில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த சுகாதார வளாகத்தை தான் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த சுகாதார வளாகம் உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் சுகாதார வளாகத்தில் உள்ள மோட்டார்கள் பழுதடைந்துள்ளது. இதனால் இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்