நடவடிக்கை தேவை

Update: 2023-04-19 08:43 GMT

சரக்கல்விளை வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் மாலை நேரங்களில் இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் மூலம் விளையாடி வந்தனர். தற்போது இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகள் நலன் கருதி விளையாட்டு உபகரணங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜகண்ணன், சரக்கல்விளை.

மேலும் செய்திகள்