பூங்கா அமைக்கவேண்டும்

Update: 2022-07-21 16:08 GMT

தஞ்சை 49-வது வார்டு பவானி நகரில் பொதுமக்கள், குழந்தைகள் நலன் கருதி பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த பணியில் தொய்வு ஏற்பட்டு தற்போது பூங்கா அமைய இருந்த இடம் பராமரிப்பின்றி குப்பை கொட்டும் இடமாக மாறிவருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி குப்பைகளில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி குடியிருப்புகளுக்கு புகுந்துவிடுகின்றன. இவற்றால் வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றவும், பூங்கா அமைப்பதற்காக பணியை விரைவுபடுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்