பொதுமக்கள் அவதி

Update: 2023-04-09 14:16 GMT

ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரை 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் கவுந்தப்பாடி பஸ் நிலையத்துக்குள் வருவதில்லை. கவுந்தப்பாடி நால்ரோட்டிலேயே பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் அங்கிருந்து சிறிது தூரம் பஸ் நிலையத்துக்கு நடந்து செல்ல வேண்டியதுள்ளது. இதன் காரணமாக சிறியவர் முதல் பெரியவர் வரை மிகவும் அவதிப்படுகின்றனர். அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

மேலும் செய்திகள்