சேதமடைந்த விலங்கு பொம்மை சிலைகள்

Update: 2023-03-29 16:23 GMT
பழனி பைபாஸ் சாலை பகுதியில் உள்ள பழனியாண்டவர் சிறுவர் பூங்காவில் சிங்கம், முதலை, மான் உள்ளிட்ட விலங்குகளின் பொம்மைகள் உள்ளன. இந்நிலையில் பூங்காவில் உள்ள சிலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இவை பெயர்ந்து உள்ளதால் அவற்றை பார்வையிடும்போது சிறுவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. மேலும் பூங்கா பகுதியில் புதர்செடிகள் வளர்ந்தும் உள்ளது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே கோவில் நிர்வாகம் அதை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்