பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி தொடங்குமா?

Update: 2022-07-21 11:09 GMT
மன்னார்குடி அடுத்த தளிக்கோட்டை ஊராட்சி மேலதளிக்கோட்டையில் உள்ள பயணிகள் நிழற்குடை கட்டுமான பணி பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அந்த பயணிகள் நிழற்குடையை திறந்த வெளி பாராக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டுமான பணியை மீண்டும் தொடங்கி பயணிகள் நிழற்குடையை பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்