பயன்படாத அம்மா பூங்கா

Update: 2023-03-08 05:47 GMT
சேலம் மாவட்டம் முத்துநாய்க்கன்பட்டியில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. மேலும் பூங்கா உள்ளே உடற்பயிற்சி நிலையமும் உள்ளது. இந்தநிலையில் பூங்காவின் எதிரே அரசு டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இதனால் மதுபிரியர்கள் பூங்காவின் உள்ளே மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு அசுத்தம் செய்தனர். இதனால் பூங்காவை பூட்டிவிட்டனர். பின்னர் அந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டனர். ஆனால் பூங்கா இன்றுவரை பூட்டியே வைத்துள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்