பூட்டிக்கிடக்கும் பூங்கா

Update: 2023-03-01 17:25 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 லட்சத்தில் பூங்கா, ரூ.10 லட்சத்தில் உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பூங்காவும், உடற்பயிற்சி கூடமும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்