பூங்கா பராமரிக்கப்படுமா ?

Update: 2023-02-05 17:37 GMT

தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் இருவழி சாலை தர்மபுரி பைபாஸ் சாலையில் இருந்து தொடங்குகிறது. இந்த சாலையின் மையப்பகுதியில் பல்வேறு மரங்கள் கொண்ட மரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் பூங்காவிற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கு சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பூங்காவை சீரமைத்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்