ஏரியை ஆக்கிரமித்த முள்செடிகள்

Update: 2022-07-19 11:13 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அகரம் பகுதியில் உள்ள ஏரியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பது வழக்கம். இதன் மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய பணிகளுக்கும் தண்ணீர் கிடைத்து வந்தது. இந்த ஏரியில் தண்ணீர் தேங்கும் பரப்பில் தற்போது முள் செடிகள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்துவிட்டன. இதனால் இந்த ஏரியில் மழைநீர் தேங்குவதில்லை. எனவே ஏரியில் உள்ள முள் செடிகளை அகற்றி ஏரியை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனுசாமி, பாலக்கோடு.

மேலும் செய்திகள்