மரப் பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2022-12-21 14:06 GMT
தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு செல்லும் இருவழி சாலையின் மையப்பகுதியில் மரப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா நீண்ட காலமாக முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த பூங்காவை ஒட்டி உள்ள சாலையோர பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகள் இந்த பகுதியில் பரவி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன. எனவே இந்த மரப் பூங்காவை முறையாக பராமரிக்கவும், இங்கு ஏற்பட்டு வரும் சுகாதார சீர்கேட்டை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், தர்மபுரி.

மேலும் செய்திகள்