அங்காடி கட்டிட பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-07-17 15:26 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி அம்மாகுளத்தங்கரையில் புதிய அங்காடி கட்டிடம் கட்டும் பணி நடந்து வந்தது. இந்த பணி கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதி பணிகள் முடிந்த நிலையில் அங்காடி கட்டிடம் காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் கட்டிடம் நாய்கள், கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது. அதுமட்டுமின்றி கட்டிட பணிகள் முடிவடையாததால் அந்த பகுதி மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்காடி கட்டிட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்