பராமரிக்க வேண்டும

Update: 2022-11-02 18:45 GMT

கோபி வாஸ்து நகரில் நகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினமும் காலை, மாலை என 2 வேளையும் வந்து செல்கிறார்கள். ஆனால் பூங்காவில் செடிகள் அதிக அளவில் வளர்ந்து உள்ளது. மேலும் புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே பூங்காவில் அதிகமாக வளர்ந்த செடிகள் மற்றும் புதர்களை அகற்றி பராமரிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்