கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் சிலர் நடைபயிற்சிக்கு இடையூறாக நடைபாதையில் மோட்டார் சைக்கிளில் வலம் வருவதுடன் தங்களது மோட்டார் சைக்கிள்களை நடைபாதையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே நடைபாதையில் மோட்டார் சைக்கிளில் வலம் வருபவர்களை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.