கழிவறை வசதி வேண்டும்

Update: 2022-07-15 10:40 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே வடக்காளத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உள்ள கழிவறை முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் கழிவறையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவறை கட்டிடம் பழுதடைந்து மோசமான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக கழிவறைக்கு செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பள்ளியில் முறையான கழிவறை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்