ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உடையார்பட்டி அருகே உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள குழந்தைகளின் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் இங்கு வரும் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை புதிதாக மாற்றியமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.