பராமரிப்பு இல்லாத பூங்கா

Update: 2022-09-24 14:52 GMT

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா சரிவர பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், முட்புதர்கள் மண்டியும் காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தை காண முடிகிறது. சிறுவர்கள், பொதுமக்கள் நலன் கருதி, அந்த பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை சீரமைத்தும், முட்புதர்களை அகற்றியும் சரியான முறையில் பராமரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் செய்திகள்