கூட்டுறவு அங்காடிக்கு புதிய கட்டிடம் வேண்டும்

Update: 2022-07-14 12:36 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூங்கில்குடியில் கூட்டுறவு அங்காடி இயங்கி வருகிறது. இந்த அங்காடி செயல்பட்டு வரும் கட்டிடம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு, சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கூட்டுறவு அங்காடி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக காக்காகோட்டூர் கிராம மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து காணப்படும் அங்காடி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய கூட்டுறவு அங்காடி கட்டி தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்