மறைமலைஅடிகளார் சிலை சுத்தம் செய்யப்பட்டது

Update: 2022-07-14 12:33 GMT
நாகை ரெயில் நிலையம் எதிரே மறைமலை அடிகளாரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த சிலை முறையான பராமரிப்பின்றி காணப்பட்டது. இதனால் சிலையை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. மேலும், சிலை முழுவதும் தூசிகள் படிந்து அசுத்தமாக இருந்தது. இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறைமலை அடிகளார் சிலையை சுற்றி வளர்ந்திருந்த செடி,கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்