'தினத்தந்தி' க்கு பாராட்டு

Update: 2022-07-14 07:02 GMT

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்குள்ள ரோஸ்கார்டன் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தன. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடனே திரும்பி செல்கின்றனர் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி  வெளியாகியிருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த  அதிகாரிகள் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சரி செய்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்